ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-09-06 12:39 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், சின்னதாராபுரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்