குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-20 17:58 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் உள்ள ஆதிதிராவிட நல மாணவர் விடுதி அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடைந்துள்ளதால், குடிநீர் வினியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குழாயை உடனடியாக சீரமைத்து அப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்