கடலூர் அருகே வரக்கால்பட்டு ரெயில் நிலையத்தில் குடிநீர், மேற்கூரை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் பயணிகள் ரெயிலுக்காக வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் குடிநீர், மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.