கடலூர் மாவட்டம் வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடி கிராமத்தில் உள்ள கிழக்குத்தெருவில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி தற்போது பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள சிமெண்டு காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவதால், மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. எனவே குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து, அசம்பாவிதம் ஏற்படும் முன் அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.