பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2023-05-21 16:44 GMT

கோபால்பட்டி அருகே கனவாய்ப்பட்டி பங்களா சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த தொட்டி சேதமடைந்து வருவதுடன் தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் முறையாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேல்நிலை தொட்டியை முறையாக பராமரிப்பதுடன், குழாயில் ஏற்பட்ட உடைப்பையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்