இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2023-05-14 16:30 GMT
பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் குடிநீர் தொட்டி அதன் உறுதித்தன்மையை இழந்து உள்ளது. எனவே சேதமடைந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக தொட்டி கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்