புதர்மண்டி கிடக்கும் கால்நடைகள் நீர்அருந்தும் தொட்டி

Update: 2023-05-07 18:17 GMT
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி நடுமேட்டுக்குப்பம் 8-வது வார்டு பகுதியில் கால்நடைகள் நீர்அருந்துவதற்கு ஏதுவாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி அமைக்கப்பட்டது. இருப்பினும் தகுந்த பராமரிப்பு இல்லாத காரணத்தால், அந்த தொட்டி புதர்மண்டி கிடக்கிறது. மேலும் இதன் அருகே உள்ள குடிநீர் குழாயிலும், குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. எனவே கால்நடைகள் நீர்அருந்தும் தொட்டியை சீரமைப்பதோடு, குடிநீர் குழாய்க்கும் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்