சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-04-30 17:57 GMT
பண்ருட்டி ஒன்றியம் மணம்தவிழ்ந்த புத்தூர் ஊராட்சி மேல்அருங்குணம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி தனது உறுதித்தன்மையை இழந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து, அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்