விஷ ஜந்துகள் நடமாட்டம்

Update: 2023-04-09 07:12 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோதைபாளையம் கிராமத்தில் உப்பு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. மேலும் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ள சிமெண்டு தளத்தில் கூட புதர் செடிகள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக அங்கு விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க செல்லவே பெண்கள் அச்சப்படும் நிலை காணப்படுகிறது. எனவே புதர் செடிகளை வெட்டி அகற்றி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்