நிரந்தர தீர்வு காணப்படுமா?

Update: 2023-03-29 08:32 GMT

மார்த்தாண்டத்தில் இருந்து ஐரேணிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மூன்றாம் பிலாவிளை பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அடிக்கடி ஏற்பட்டும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து சாலையையும் சீமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரஸ்வதி, மூன்றாம் பிலாவிளை, காப்புக்காடு.

மேலும் செய்திகள்