தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-03-22 17:36 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் முறையான வடிகால் வசதி அமைக்காததால் கடந்த சில நாட்களுக்கு பெய்த மழை காரணமாக தண்ணீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்