ஆபத்தான குடிநீர் தொட்டியை மாற்ற கோரிக்கை

Update: 2023-03-22 12:45 GMT
கரூர் மாவட்டம், பெரியவரப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தொட்டி இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்