குடிநீர் இல்லாமல் அவதி

Update: 2023-03-22 12:34 GMT
அரியலூர் மாவட்டம், அங்கராயநல்லூர் பஞ்சாயத்து, உத்திரக்குடி கிராமம் மெயின் சாலையில் சேவை மையம் உள்ளது. இந்த மையத்தின் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சரியாக வினியோகம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வெவ்வேறு இடங்களுக்கு குடிநீருக்காக பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்