திறந்து கிடக்கும் குடிநீா் கிணறு

Update: 2023-03-19 17:54 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியம் மாரனோடை கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணறு திறந்த நிலையில் உள்ளதால், குப்பைகள் விழுந்து குடிநீர் அசுத்தம் அடைந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீா் கிணற்றை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்