குடிநீர் குழாயின் பரிதாப நிலை

Update: 2023-03-01 17:35 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு சரவணபுரம் பெரியார் தெருவில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்