காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வேண்டும்

Update: 2023-03-01 12:05 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் மலைக்கோவில் அருகிலேயே உள்ள பாரதிநகர், காந்திநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்ககுடிநீர் திட்ட குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்