தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-02-19 17:14 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு சிவ சண்முகா நகர் வைடிப்பக்கத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் நல்லி இல்லாமல், குடிநீர் எந்நேரமும் வெளியேறி வீணாகி வந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து குடிநீர் விரயமாவதை தடுக்க புதிதாக நல்லி அமைத்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்