குளத்ைத தூா்வார ேவண்டும்

Update: 2023-01-11 08:38 GMT


புலியூர்சாலை ஊராட்சி குட்டைக்கோடு நாராயணத்துகோணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தில் பாசிகள் படர்ந்தும், புற்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளையும், வளர்ந்துள்ள புற்களையும் அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


===============

மேலும் செய்திகள்