ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் அடிபம்பு

Update: 2022-12-28 12:55 GMT
கரூர் மாவட்டம், சொட்டையூர் பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்து ஆழ்துளை கிணற்றில் குடிநீர் மேலிருக்கும் பம்பை பொருத்தினர். அந்த பம்பிலிருந்து(அடி பம்பு) பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தார் சாலை ஓரத்திலேயே குடிநீர் மேலிழுக்கும் பம்பு உள்ளது. இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் மேலிழுக்கும் பம்பை அகற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்