வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-12-25 12:22 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் , மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை, பாலத்துறை ,தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான தண்ணீர் தாமரைகள் மற்றும் பல்வேறு செடி ,கொடிகள் சென்று பாலத்துறை பகுதியில் உள்ள பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாய்க்கால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் உள்ளது. அதனால் கடைமடை வரை தண்ணீர் சென்று விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்த்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்