பயனற்றுள்ள நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-12-14 12:04 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் சாலையில் நொய்யல் ரெயில்வே கேட் அருகே அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி லட்சக்கணக்கான ரூபாய் செலவில் தார் சாலை அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதனுள் நீர்மூழ்கி மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர், சின்டெக்ஸ் டேங்க் வைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் தார் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் தாகத்தை தீர்த்து வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்ததன் காரணமாக பழுதை நீக்குவதற்காக மின்மோட்டாரை எடுத்துச் சென்றனர். ஆனால் மீண்டும் அந்த மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. அதன் காரணமாக சில ஆண்டுகளாக சின்டெக்ஸ் டேங்க் வெயிலிலும், மழையிலும் இருப்பதன் காரணமாக மிகவும் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்