பள்ளிக்குள் புகுந்த மழைநீர்

Update: 2022-12-07 16:40 GMT

நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பெரிய அரவக்குறிச்சியில் அரசு மேல்நிலை மற்றும் தொடக்க பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள் மழை நீர் புகுந்து ேதங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே பள்ளியில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்