வீணாகும் குடிநீர்

Update: 2022-12-04 10:06 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் பதிக்கும் பணி சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. குழாய் அமைப்பதற்காக தோண்டப்படும் குழியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் அப்படியே போட்டுவிட்டனர்.இதனால் ஆங்காங்கே குடிநீரீ குழாயில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலைகளில் சாலைகளில் தேங்கி நிற்கிறது. எனவே ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்