பாதியில் நிற்கும் குடிநீர் குழாய் பணி

Update: 2022-11-27 09:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை-சூளகிரி ரோட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் குழாயை சீரமைக்க தோண்டினர். ஆனால் இதுவரை அந்த குடிநீர் குழாயை சரி செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்