குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி அமைக்கப்படுமா?

Update: 2022-11-23 13:17 GMT

தூத்துக்குடி 3-ம் மைல் கந்தன் காலனி 3-வது தெருவில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது அங்குள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைக்காமல், தொட்டியைச் சுற்றிலும் சாலை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள், திறந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்