புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி தேவை

Update: 2022-11-16 17:50 GMT
அண்ணாகிராமம் ஒன்றியம் பண்டரக்கோட்டை ஊராட்சி அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்த காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்