தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-13 17:36 GMT
கடலூர் மாவட்டம் ராஜிவ்காந்தி நகர் கூத்தப்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடிங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் மழைநீரில் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துாநாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்களுக்கு பலவித நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. இதை தவிா்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்