திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஜெகநாதபுரம் இனாம் அகரம் கிராமத்தில் உள்ள லாவல் ஏரியில் கடற்பாளை செடிகள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்கிறது. இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் சிலர் மாட்டிறைச்சி, இறந்த நிலையில் மாடுகள், கன்று குட்டிகள் போன்றவற்றை இந்த ஏரியோரம் திறந்தவெளியில் போட்டு சென்றுவிடுகின்றனர். ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் நிலையுள்ளது. இந்த கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.