காட்சி பொருளான குடிநீர் தொட்டி

Update: 2022-10-23 16:24 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழி பஞ்சாயத்து வடக்கு குமாரசாமிபுரம்- பூச்சிக்காடு ரோட்டில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பழுதால் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, மோட்டாரை பழுது நீக்கி, காட்சிப்பொருளான சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீரை நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்