சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-09-24 14:32 GMT
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் காலனியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுமார் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகளும் அவ்வபோது கீழே விழுந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்