குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோரிக்கை

Update: 2022-09-23 14:07 GMT

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் நலன் கருதி மேல்நிலை நீர்தேக்க குடிநீர் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாததால் குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் அப்பகுதியில் மரக்கிளைகளில் இருந்து இலைகள் உறிர்ந்து குடிநீர் தொட்டியில் விழுந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்