குடிநீர் தேவை

Update: 2022-09-15 13:38 GMT

திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு சங்கிவிளை பகுதியில் திருச்செந்தூர்-பரமன்குறிச்சி சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. அதை சரிசெய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்