பழுதடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-09-15 13:14 GMT

கரூர் மாவட்டம், உப்புபாளையம் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நலன்கருதி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் குடிநீர் பழுது அடைந்ததால் புதிததாக குடிநீர் கட்டப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே ஏற்கனவே பழுதடைந்து உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்