பயன்பாடின்றி இருக்கும் குடிநீர் தொட்டி

Update: 2022-09-15 10:47 GMT
பரங்கிப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆஸ்பத்திரி எதிரே  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல், பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், அப்பகுதி மக்களும் குடிநீருக்காக அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க,குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்