சிதிலமடைந்து வரும் நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-09-06 15:06 GMT
கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்குள்ள ரேஷன் கடை அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் அந்தத் தொட்டியில் ஏற்றப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்