போக்குவரத்து நெரிசல்

Update: 2026-09-06 15:18 GMT

நாமக்கல் நகரில் சேலம், திருச்செங்கோடு பிரிவு சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் இருந்தும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் நிற்க கூடிய சூழல் உள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அந்த சாலை முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. 35எனவே நாமக்கல் நகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சேலம், திருச்செங்கோடு பிரிவு சாலை பகுதியில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்