காட்பாடி-பாகாயம் தனியார் பஸ்களில் ஏற்கனவே ஒரு சில பஸ்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2 வாரமாக பெரும்பாலான தனியார் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-க்கு பதிலாக ரூ.7 வசூலிக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்துக்கு காட்பாடியில் இருந்து ரூ.10-ம், பழைய பஸ் நிலையத்துக்கு ரூ.9-க்கு பதிலாக 3 ரூபாய் கூடுதலாக சேர்த்து ரூ.12 வசூலிக்கப்படுகிறது. அரசு தனியார் பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது எரிபொருள் விலையேற்றம் என தனியார் தரப்பில் கூறப்படுகிறது. எனவே கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.