ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பஸ் நிலையம் அருகே உள்ள சாலையோரத்தில் வாகனங்கள்ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் சாலையில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. இதனால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.