கோவில்பட்டி- புதுரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.