திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் கார், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.