அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு, புகையிலைரெட்டியூர், குங்குமபாளையம் வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதில் பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் சென்று வந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலைக்கு பிறகு இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் 3 கி.மீ. தூரம் வெயிலிலும், மழையிலும் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அந்தியூர்-பவானி வழித்தடத்தில் பி8, ஏ6 என்ற அரசு டவுன் பஸ்களை இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.