பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

Update: 2024-03-24 17:50 GMT
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மணக்குப்பம் பகுதியில் உள்ளது. இந்த கல்லூரி திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து இந்த கல்லூரிக்கு செல்வதற்கு அரசு பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், பேராசியர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவ, மாணவிகள் நலம் கருதி கல்லூரிக்கு சென்று வர அரசு பஸ் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்