பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-08-27 09:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் 'சோடா கடை' பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்களும், அரசு பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் வேலைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு கொடுத்து 2 மாதங்கள் ஆகிகிறது. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகார் மனு திருவண்ணாமலை போக்குவரத்துக்கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, குறுந்தகவல் வந்துள்ளது. எனவே திருவண்ணாமலை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, 'சோடா கடை' பஸ் நிறுத்தத்தில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.

சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி