ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்கிறார்கள். அதில் ரெயிலில் வருவோர் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்கிறார்கள். அந்த ரெயில் நிலையம், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் முக்கிய ரெயில் நிலையம் ஆகும். அந்த ரெயில் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்ல பஸ் வசதி இல்லை. அதிக கட்டணம் செலுத்தி தனியார் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தையும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் இணைக்கும் வகையில் புதிய பஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-குமார், ராணிப்பேட்டை்.