அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 9.30 மணியில் இருந்து 10 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் மின்சார ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். இதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். வேலை, மருத்துவம், கல்வி, வியாபாரம் போன்றவற்றுக்கு செல்வோருக்கு பயன் உள்ளதாக இருக்கும். ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதாகத்அலி, அரக்கோணம்.