தடுப்புகள் அவசியம்

Update: 2023-03-08 08:00 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் தை மாதம் தேர்த்திருவிழா நடைபெற்ற போது தேர்வீதி உலா வருவதற்காக பஸ் நிலையத்திலிருந்து அய்யா காமராஜர் சிலை வரை மற்றும் பஸ் நிலையத்திலிருந்து நங்கவள்ளி ரோட்டில் உள்ள பழைய போலீஸ் நிலையம் வரை தடுப்புகள் அகற்றப்பட்டன. இந்த இடங்கள் மிக முக்கிய போக்குவரத்து உள்ளதாகவும்.  3  முக்கிய ரோடு பிரியும் இடமாகும். இதனால் வாகனங்கள் கட்டுபாடு இல்லாமல் சென்று வருகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் விபத்து ஏற்படும் விதமாகவும் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைகளில் அவசியம் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி