பாலத்தில் பள்ளம்

Update: 2023-08-06 11:34 GMT

திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், தண்டலைப்புத்தூரில் முசிறி சாலையில் இருந்து வாத்தலைக்கு பிரிந்து செல்லும் ஊராட்சி சாலையின் குறுக்கே பலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்