ஊருக்குள் வராத பஸ்கள்

Update: 2023-06-11 12:21 GMT

உப்பிலியபுரம் ஒன்றியம், பி.மேட்டூர் வழியாக செல்லும் பஸ்கள் பெரும்பாலும் புறவழிச்சாலையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தாத்தையங்கார்பேட்டையில் இருந்து பி.மேட்டூர் வழியாக உப்பிலியபுரம் செல்லும் பஸ்கள் காலதாமதத்தை காரணம் காட்டி பெரும்பாலும் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதால் பொதுமக்கள், முதியோர் மற்றும் பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் அனைத்து பயணங்களிலும் ஊருக்குள் வந்து செல்ல சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்