கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-24 16:16 GMT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏரளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். காலை 8.45 மணியளவில் முசிறி கைகாட்டியில் இக்கல்லூரிக்கு பஸ் ஒன்று மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது. ஆனால் இந்த பஸ்சில் சுமார் 200 மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் பட்டிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து விபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி