சேதமடைந்துள்ள நடைபாதை

Update: 2023-05-21 11:55 GMT

திருச்சி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான புளியஞ்சோலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை, நீர் அரிப்பினால் வலுவிழந்து அபாயகரமான நிலையிலுள்ளது. புளியஞ்சோலை நாட்டாமடுவிலிருந்து ஆலத்துடையான்பட்டிக்கு செல்லும் நீரோட்டத்தினால், அதனையொட்டியுள்ள நடைபாதையின் அடிப்பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. அய்யாற்றில் நீர் பெருக்கு ஏற்பட்டால், நடைபாதை முழுமையாக சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி